திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நாடக விண்ணப்பம்
nāṭaka viṇṇappam
மருட்கை விண்ணப்பம்
maruṭkai viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

056. திருவண்ண விண்ணப்பம்
tiruvaṇṇa viṇṇappam

    திருவொற்றியூர்
    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. கண்ணப்பா என்றருளும் காளத்தி யப்பாமுன்
    வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
    உண்ணப்பா என்றுரைத்த ஒற்றியப்பா வந்தருள
    எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ.
  • 2. மஞ்சுபடும் செஞ்சடில வள்ளலே உள்ளுகின்றோர்
    உஞ்சுபடும் வண்ணம்அருள் ஒற்றியூர் உத்தமனே
    நஞ்சுபடும் கண்டம்உடை நம்பரனே வன்துயரால்
    பஞ்சுபடும் பாடுபடும் பாவிமுகம் பாராயோ.
  • 3. கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்
    அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்
    நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி
    எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ.
  • 4. நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில்
    நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும்
    தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப்
    பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
  • 5. வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே
    ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே
    தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது
    ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ.
  • 6. தொண்டர்க் கருளும் துணையே இணையில்விடம்
    உண்டச் சுதற்கருளும் ஒற்றியூர் உத்தமனே
    சண்டப் பவநோயால் தாயிலாப் பிள்ளையெனப்
    பண்டைத் துயர்கொளும்இப் பாவிமுகம் பாராயோ.
  • 7. உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
    மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது
    தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண்
    எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ.
  • 8. நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம்
    பச்சைநிறம் கொண்ட பவளத் தனிமலையே
    மிச்சை தவிர்க்கும்ஒற்றி வித்தகனே நின்அருட்கே
    இச்சைகொடு வாடும்இந்த ஏழைமுகம் பாராயோ.
  • 9. மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக்
    கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்ணுடையாய்
    சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட்
    பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
  • 10. சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர்
    சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே
    நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும்
    பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
  • 11. தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
    ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
    அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
    கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
  • 12. விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே
    மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே
    நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப்
    பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.

திருவண்ண விண்ணப்பம் // திருவண்ண விண்ணப்பம்

No audios found!