திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திரு உலாத் திறம்
tiru ulāt tiṟam
புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்
puṇarā viraku poruntuṟu vēṭkaiyiṉ iraṅkal
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

009. வியப்பு மொழி
viyappu moḻi

    நற்றாய் நயத்தல்
    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன்
    வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார்
    நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
    கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 2. திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார்
    மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார்
    கருவில் தோன்றும் எங்கள்உயிர் காக்க நினைத்த கருணையினார்
    குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 3. என்னா ருயிர்போல் மகளேநீ என்ன தவந்தான் இயற்றினையோ
    பொன்னார் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொற்பதத்தார்
    தென்னார் ஒற்றித் திருநகரார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
    கொன்னார் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 4. சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
    மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
    வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
    கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 5. தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
    மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
    பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
    கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 6. வில்லார் நுதலாய் மகளேநீ மேலை நாட்செய் தவம்எதுவோ
    கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண்விழித்தார்
    வில்லார் விசையற் கருள்புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
    கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 7. அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ
    வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார்
    கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால்
    கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 8. பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
    சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
    காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
    கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 9. மலைநேர் முலையாய் மகளேநீ மதிக்கும் தவமே தாற்றினையோ
    தலைநேர் அலங்கல் தாழ்சடையார் சாதி அறியாச் சங்கரனார்
    இலைநேர் தலைமுன் றொளிர்படையார் எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
    குலைநேர் சடையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
  • 10. மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
    வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண்­ றுடையார் வெள்விடையார்
    பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
    குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

வியப்பு மொழி // வியப்பு மொழி

No audios found!