திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருக்கோலச் சிறப்பு
tirukkōlach siṟappu
திருஅருட் பெருமிதம்
tiruaruṭ perumitam
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

015. சோதிடம் நாடல்
sōtiṭam nāṭal

    தலைவி கழிமிகு காதல்
    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
    முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
    இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
    உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 2. பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
    புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
    தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
    ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 3. அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
    தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
    களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
    ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 4. எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்
    வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார்
    தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்
    உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 5. தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்
    பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
    அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ
    உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 6. பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
    மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
    வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
    உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 7. தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்
    மிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்
    துக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்
    ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 8. வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்
    வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து
    வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ
    உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 9. ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
    சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
    பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
    ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
  • 10. அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
    வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
    கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
    உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

சோதிடம் நாடல் // சோதிடம் நாடல்

No audios found!