திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கண்ணமங்கைத் தாயார் துதி
kaṇṇamaṅkait tāyār tuti
பழமலையோ கிழமலையோ
paḻamalaiyō kiḻamalaiyō
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

067. பழமலைப் பதிகம்
paḻamalaip patikam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருமால் கமலத் திருக்கண்மலர் திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தைக்
    கருமா லகற்றுந் தனிமருந்தைக் கனக சபையிற் கலந்தஒன்றை
    அருமா மணியை ஆரமுதை அன்பை அறிவை அருட்பெருக்கைக்
    குருமா மலையைப் பழமலையிற் குலவி யோங்கக் கண்டேனே.
  • 2. வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத்
    தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
    ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
    ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே.
  • 3. தவள நிறத்துத் திருநீறு தாங்கு மணித்தோள் தாணுவைநம்
    குவளை விழித்தாய் ஒருபுறத்தே குலவ விளங்கும் குருமணியைக்
    கவள மதமா கரியுரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப்
    பவள மலையைப் பழமலையிற் பரவி ஏத்திக் கண்டேனே.
  • 4. இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை
    வளைத்த மதின்மூன் றெரித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத்
    திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழுந் துரியா தீதமட்டுங்
    கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே.
  • 5. மடந்தை மலையாண் மனமகிழ மருவும் பதியைப் பசுபதியை
    அடர்ந்த வினையின் தொடக்கைஅறுத் தருளும் அரசை அலைகடன்மேல்
    கிடந்த பச்சைப் பெருமலைக்குக் கேடில் அருள்தந் தகம்புறமும்
    கடந்த மலையைப் பழமலைமேற் கண்கள் களிக்கக் கண்டேனே.
  • 6. துனியும் பிறவித் தொடுவழக்குஞ் சோர்ந்து விடவுந் துரியவெளிக்
    கினியும் பருக்குங் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும்
    பனியுந் திமய மலைப்பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக்
    கனியுஞ் சிலையுங் கலந்தஇடம்160 எங்கே அங்கே கண்டேனே.
  • 7. கருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்
    தருணச் சுவையை அச்சுவையிற் சார்ந்த பயனைத் தனிச்சுகத்தை
    வருணப் பவளப் பெருமலையை மலையிற் பச்சை மருந்தொருபால்
    பொருணச் சுறவே பழமலையிற் பொருந்தி யோங்கக் கண்டேனே.
  • 8. என்னார் உயிரிற் கலந்துகலந் தினிக்கும் கரும்பின் கட்டிதனைப்
    பொன்னார் வேணிக் கொழுங்கனியைப் புனிதர்உளத்தில் புகுங் களிப்பைக்
    கன்னார் உரித்துப் பணிகொண்ட கருணைப் பெருக்கைக் கலைத்தெளிவைப்
    பன்னா கப்பூண் அணிமலையைப் பழைய மலையிற் கண்டேனே.
  • 9. நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
    அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
    சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
    வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே.
  • 10. ஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை
    ஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்
    பாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
    சோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.

    • 160 கனியும் சிலையும் கலந்த இடம் - பழமலை (கனி - பழம். சிலை - மலை)

பழமலைப் பதிகம் // பழமலைப் பதிகம்