திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவடி சூட விழைதல்
tiruvaṭi sūṭa viḻaital
ஏழைமையின் இரங்கல்
ēḻaimaiyiṉ iraṅkal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

022. ஆற்றா விரக்கம்
āṟṟā virakkam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
    பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
    அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
    பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே.
  • 2. எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
    அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
    களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
    தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே.
  • 3. செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
    கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
    மெய்கொள் புளகம் மூடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ
    பொய்கொள் உலகோ டூடேனோ புவிமீ திருகால் மாடேனே.
  • 4. வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
    முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
    கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
    சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.
  • 5. நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
    கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள்நீர் உண்ணேனோ
    சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ
    காட்டும் அவர்தாள் கண்ணேனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.
  • 6. காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
    ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ
    மாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ
    தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே.
  • 7. காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ
    பாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ
    ஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
    தாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே.
  • 8. வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னாரோ
    இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
    பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
    செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.
  • 9. தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ
    பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ
    திணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ
    பிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே.
  • 10. மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ
    இன்னும் கோபம் ஓயாரோ என்தாய் தனக்குத் தாயாரோ
    துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ
    பன்னும் வளங்கள் செறிந்தோங்கும் பணைகொள் தணிகைத் தூயாரே.

ஆற்றா விரகம் // ஆற்றா விரக்கம்