திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
முறையீட்டுக் கண்ணி
muṟaiyīṭṭuk kaṇṇi
பேரன்புக் கண்ணி
pēraṉpuk kaṇṇi
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

081. திருவடிக் கண்ணி
tiruvaṭik kaṇṇi

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்
    என்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா.
  • 2. வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
    என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா.
  • 3. நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
    புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா.
  • 4. அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
    இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா.
  • 5. நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
    மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா.
  • 6. எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
    வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா.
  • 7. சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
    தெய்வ மணியே திருவடிதான் நோவாதா.
  • 8. எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்
    வல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா.
  • 9. அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்
    சிவமே நினது திருவடிதான் நோவாதா.
  • 10. தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
    சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா.
  • 11. வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்
    செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா.

திருவடிக் கண்ணி // திருவடிக் கண்ணி