திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இன்பத்திறன்
iṉpattiṟaṉ
அழிவுறா அருள்வடிவப் பேறு
aḻivuṟā aruḷvaṭivap pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

093. சிவயோக நிலை
sivayōka nilai

    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
    பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
    நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
    சிவனே கதவைத் திற.
  • 2. இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
    நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
    கோவே எனது குருவே எனையாண்ட
    தேவே கதவைத் திற.
  • 3. சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
    நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
    பவனே பரனே பராபரனே எங்கள்
    சிவனே கதவைத் திற.
  • 4. அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
    மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
    தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
    சிவனே கதவைத் திற.
  • 5. வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
    ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
    திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
    சிறப்பா கதவைத் திற.
  • 6. எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
    நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
    நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
    செல்வா கதவைத் திற.
  • 7. ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
    வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
    ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
    தேவா கதவைத் திற.
  • 8. ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
    ஞான அமுதமது நானருந்த - ஞான
    உருவே உணர்வே ஒளியே வெளியே
    திருவே கதவைத் திற.
  • 9. திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
    வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
    வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
    தேனே கதவைத் திற.
  • 10. சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
    மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
    ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
    தேகா கதவைத் திற.

சிவயோக நிலை // சிவயோக நிலை

No audios found!