திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சவலங் கூறல்
neñsavalaṅ kūṟal
திருவருள் விழைதல்
tiruvaruḷ viḻaital
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

030. ஆற்றாப் புலம்பல்
āṟṟāp pulampal

    கொச்சகக் கவிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு
    கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவள
    வண்ணாவோ நற்றணிகை மன்னாவோஎன்றென்றே
    எண்ணாவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே.
  • 2. மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத்
    துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி
    தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும்
    என்னப்பா இன்னும் இந்த ஏழைக் கிரங்காயோ.
  • 3. காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை
    வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்
    தூய்நின்றே தாளைத்தொழுதாடித் துன்பம்எலாம்
    போய்நின் றடைவேனோ புண்ணியநின் பொன்னருளே.
  • 4. பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில்
    வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
    என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே
    அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே.
  • 5. வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும்
    என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
    அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
    மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ.

ஆற்றாப் புலம்பல் // ஆற்றாப் புலம்பல்