திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அஞ்சாதே நெஞ்சே
añsātē neñsē
என்ன புண்ணியம் செய்தேனோ
eṉṉa puṇṇiyam seytēṉō
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

121. இது நல்ல தருணம்
itu nalla taruṇam

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. இதுநல்ல தருணம் - அருள்செய்ய
    இதுநல்ல தருணம்.
  • பல்லவி எடுப்பு
  • 2. பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
    பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல
  • கண்ணிகள்
  • 3. மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
    வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
    கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
    கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
  • 4. குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
    குதித்த314 மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
    வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
    விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
  • 5. கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
    கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
    தாபமும் சோபமும் தான்தானே சென்றது
    தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல
  • 6. கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
    கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
    புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
    பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.
  • 7. இதுநல்ல தருணம் - அருள்செய்ய
    இதுநல்ல தருணம்.

    • 314. கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.

இது நல்ல தருணம் // இது நல்ல தருணம்