திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருப்பள்ளி எழுச்சி
tiruppaḷḷi eḻuchsi
அடைக்கலம் புகுதல்
aṭaikkalam pukutal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

064. திரு உந்தியார்
tiru untiyār

    கலித்தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. இரவு விடிந்தது இணையடி வாய்த்த
    பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
    பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
  • 2. பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
    தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
    தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
  • 3. தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
    ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
    இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
  • 4. துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
    இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
    எண்ணம் பலித்ததென்று உந்தீபற.
  • 5. ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
    தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
    சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.
  • 6. திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
    பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
    பலித்தது பூசையென்று உந்தீபற.
  • 7. உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
    தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
    தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
  • 8. எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
    சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
    சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
  • 9. தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
    சிந்தை களித்தேன்என்று உந்தீபற
    சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
  • 10. முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
    சித்தியை உற்றேன்என்று உந்தீபற
    சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.

திரு உந்தியார் // திரு உந்தியார்