திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பற்றறுத்தல்
paṟṟaṟuttal
பிரிவாற்றாமை
pirivāṟṟāmai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

067. சிற்சத்தி துதி
siṟsatti tuti

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
    பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே352 எனைஈன்ற
    ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
    நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
  • 2. பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த
    வருணக் கொடியே எல்லாஞ்செய் வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
    தருணக் கொடியே என்தன்னைக் தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
    கருணைக் கொடியே ஞானசிவ காமக் கொடியே அருளுகவே.
  • 3. நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப்
    பாட்டுக் கொடியே இறைவர்வலப் பாகக் கொடியே353 பரநாத
    நாட்டுக் கொடியே எனைஈன்ற ஞானக் கொடியே என்னுறவாம்
    கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே .
  • 4. மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும்
    சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே
    காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற
    கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 5. நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
    பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
    தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
    கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 6. மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
    வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே
    கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத
    குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 7. புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு
    நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே
    வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில்
    குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 8. வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
    மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
    செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
    குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 9. கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
    அடுத்த கொடியே அருளமுதம் அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
    எடுத்த கொடியே சித்திஎலாம் இந்தா மகனே என்றெனக்கே
    கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 10. ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
    பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
    தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
    கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.

    • 352, 353. இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு.

சிற்சத்தி துதி // சிற்சத்தி துதி

No audios found!