திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தேவ ஆசிரியம்
tēva āsiriyam
போற்றித் திருவிருத்தம்
pōṟṟit tiruviruttam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

049. இங்கிதப் பத்து
iṅkitap pattu

    கலிநிலை வண்ணத்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
    பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
    ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால்
    வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயல்அம்மா.
  • 2. மந்தா ரம்சேர் பைம்பொழி லின்கண் மயிலேறி
    வந்தார் அந்தோ கண்டனன் அங்கை வளைகாணேன்
    சந்தா ரம்சூழ் தண்கிளர் சாரல் தணிகேசர்
    தந்தார் என்பால் தந்தார் என்னைத் தந்தாரே.
  • 3. நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்மாலும்
    விதியுந் துதிஐம் முகனார் மகனார் மிகுசீரும்
    நிதியும் பதியும் கதியும் தருவார் நெடுவேலார்
    வதியும் மயின்மேல் வருவார் மலரே வரும்ஆறே.
  • 4. சந்தார் வரையுள் சிந்தா மணிநேர் தணிகேசர்
    மந்தா நிலம்மே வுந்தார் மறுகில் மயிலேறி
    வந்தார் நிலவோர் செந்தா மரையின் மலர்வாசக்
    கொந்தார் குழல்என் நிலையுங் கலையுங் கொண்டாரே.
  • 5. தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்
    சந்தே னொழிவாய் அந்தேன் மொழியாய் தனிஇன்று
    வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி
    நொந்தேன் முலைமீ தவ்வுரை என்றார் நுவல்என்னே.
  • 6. தண்தணி காந்தள்ஒர்14 சண்பக மலரின் தளர்வெய்தத்
    தெண்டணி நீலம்ஒர்14 செங்குவ ளையினிற் றிகழ்வேன்பால்
    வண்டணி கேசரும் வந்தருள் வாரோ வாராரோ
    தொண்டணி வீர்ஒரு சோதிட மேனும் சொல்லீரே.
  • 7. காமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ
    தேமலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல்
    ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே
    ஓமலர் அடிகேள் ஒன்றினை ஒன்றென் றுரையாயே.
  • 8. தேடுங் கிளிநீ நின்னை விளம்பித் திருஅன்னார்
    அடுந் தணிகையில் என்உயிர் அன்னார் அருகேபோய்க்
    கூடும் தனமிசை என்பெயர் வைத்தக் கோதைக்கே
    ஈடும் கெடஇன் றென்னையும் ஈந்தருள் என்பாயே.
  • 9. பொன்னை இருத்தும் பொன்மலர் எகினப் புள்ளேநீ
    அன்னை இகழ்ந்தே அங்கலர் செய்வான் அனுராகம்
    தன்னை அளிக்குந் தண்டணி கேசர் தம்பாற்போய்
    என்னை இகழ்ந்தாள் என்செயல் கொண்டாள் என்பாயே.
  • 10. வதியும் தணிகையில் வாழ்வுறும் என்கண் மணி அன்னார்
    மதியுந் தழல்கெட மாமயின் மீதிவண் வருவாரேல்
    திதியும் புவிபுகல் நின்பெயர் நெறியைத் தெரிவிப்பான்
    நதியுந் துணவுத வுவனங் கொடிநீ நடவாயே.
  • 11. மன்றேர் தணிகையி னின்றீர் கதிதர வந்தீரோ
    என்றே னசைதரு மின்றேன் மொழியாய் யானுன்பால்
    இன்றே சுரருல கெய்திட வந்தே னென்றார்காண்
    குன்றேர் முலையா யென்னடி யவர்சொற் குறிதானே.
  • 12. சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
    தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
    மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
    ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.

    • 14.காந்தளோர்,நீலமோர். திகழ்வென்பால்.தொ.வே.முதற்பதிப்பு

இங்கிதப் பத்து // இங்கிதப் பத்து