திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கந்தர் சரணப்பத்து
kantar saraṇappattu
சண்முகர் கொம்மி
saṇmukar kommi
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

054. திருப்பள்ளித்தாமம் தாங்கல்
tiruppaḷḷittāmam tāṅkal

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
    தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
    உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
    தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
  • 2. தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தே னந்தோ காலமெலாம்
    அல்ல லகற்றிப் பெரியோரை யடுத்து மறியேன் அரும்பாவி
    செல்லத் தணிகைத் திருமலைவாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
    வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே.
  • 3. அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதினினைவாய்க்
    கவலைப் படுவ தன்றிசிவ கனியைச் சேரக் கருதுகிலேன்
    திவலை யொழிக்குந் திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்குக்
    குவளைக் குடலை எடுக்காமற் கொழுத்த வுடலை எடுத்தேனே.

திருப்பள்ளித்தாமம் தாங்கல் // திருப்பள்ளித்தாமம் தாங்கல்