திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சண்முகர் கொம்மி
saṇmukar kommi
(பொது) தனித் திருமாலை
(potu) taṉit tirumālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

056. சண்முகர் வருகை
saṇmukar varukai

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
  • 1. வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
    வள்ளி மணாளரே வாரும்
    புள்ளி மயிலோரே வாரும்.
  • 2. சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
    சண்முக நாதரே வாரும்
    உண்மை வினோதரே வாரும்.
  • 3. பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
    பொன்னான வேலரே வாரும்
    மின்னார்முந் நூலரே வாரும்.
  • 4. காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
    கண்ணுதல் சேயரே வாரும்
    ஒண்ணுதல் நேயரே வாரும்.
  • 5. செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
    செங்கல்வ ராயரே வாரும்
    எங்குரு நாதரே வாரும்.
  • 6. அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
    ஆறுமுகத் தோரே வாரும்
    மாறில்அகத் தோரே வாரும்.
  • 7. சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
    சூரசங் காரரே வாரும்
    வீரசிங் காரரே வாரும் .
  • 8. வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
    வேலாயுதத் தோரே வாரும்
    காலாயுதத் தோரே வாரும்.
  • 9. சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
    தேவர்கள் தேவரே வாரும்
    மூவர் முதல்வரே வாரும்.
  • 10. பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
    பன்னிரு தோளரே வாரும்
    பொன்மலர்த் தாளரே வாரும்.
  • 11. மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
    மாமயில் வீரரே வாரும்
    தீமையில் தீரரே வாரும்.
  • 12. தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
    சுப்பிர மணியரே வாரும்
    வைப்பின் அணியரே வாரும்.

சண்முகர் வருகை // சண்முகர் வருகை