திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
tirumullaivāyil tiruviṇṇappam
கொடைமடப் புகழ்ச்சி
koṭaimaṭap pukaḻchsi
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

014. காட்சிப் பெருமிதம்
kāṭsip perumitam

    திருவலிதாயம்
    கலிவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
    உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ்
    வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ
    தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ.
  • 2. சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
    எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
    தந்தை யேவலி தாயத்த லைவநீ
    கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
  • 3. வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே
    மாலை கொண்ட வளர்வல்லி கேசனே
    பாலை கொண்ட பராபர நீபழஞ்
    சேலை கொண்ட திறம்இது என்கொலோ.
  • 4. பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
    மன்னும் மாமணி யேவல்லி கேசனே
    உன்ன நீஇங்கு டுத்திய கந்தையைத்
    துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
  • 5. கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே
    மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ
    தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை
    உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே.
  • 6. ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
    மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ
    பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
    தோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.
  • 7. துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
    மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
    துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
    என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
  • 8. மாசில் சோதிம ணிவிளக் கேமறை
    வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
    தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
    தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
  • 9. தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம்
    சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
    பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர்
    யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே.
  • 10. மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
    வல்லி தாயம ருவிய நாதனே
    புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
    கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.

காட்சிப் பெருமிதம் // காட்சிப் பெருமிதம்

No audios found!