திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அறிவரும் பெருமை
aṟivarum perumai
எழுத்தறியும் பெருமான் மாலை
eḻuttaṟiyum perumāṉ mālai
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

019. அருள்விடை வேட்கை
aruḷviṭai vēṭkai

    திருவொற்றியூர்
    கலி விருத்தம்
  • 1. போகம் கொண்ட புணர்முலை மாதொரு
    பாகம் கொண்ட படம்பக்க நாதரே
    மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
    மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.
  • 2. தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
    பவள மேனிப் படம்பக்க நாதரே
    கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
    இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
  • 3. சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
    பால மேவும் படம்பக்க நாதரே
    ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
    ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.
  • 4. உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே
    படைகொள் சூலப் படம்பக்க நாதரே
    கடைகொள் நஞ்சுண்டு கண்டம்க றுத்தநீர்
    இடையில் ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
  • 5. நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
    பறைய நின்றப டம்பக்க நாதரே
    உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
    குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.
  • 6. வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
    பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
    கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
    வணங்கு வார்க்கென்கொல் வாய்திற வாததே.
  • 7. நாட நல்இசை நல்கிய மூவர்தம்
    பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
    வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
    ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.
  • 8. சுலவு காற்றனல் தூயமண் விண்புனல்
    பலவு மாகும்ப டம்பக்க நாதரே
    நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
    குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ.
  • 9. அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
    படிவ மாகும்ப டம்பக்க நாதரே
    நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
    மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.
  • 10. மதிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப்
    பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே
    விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர்
    துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே.

அருள்விடை வேட்கை // அருள்விடை வேட்கை

No audios found!