திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இரந்த விண்ணப்பம்
iranta viṇṇappam
மருண்மாலை விண்ணப்பம்
maruṇmālai viṇṇappam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

012. கருணை மாலை
karuṇai mālai

    கலிவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
    செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
    மங்க லம்பெற வைத்த வள்ளலே
    தங்க ருள்திருத் தணிகை ஐயனே.
  • 2. ஐய னேநினை அன்றி எங்கணும்
    பொய்ய னேற்கொரு புகல்இ லாமையால்
    வெய்ய னேன்என வெறுத்து விட்டிடேல்
    மெய்ய னேதிருத் தணிகை வேலனே.
  • 3. வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
    மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
    சால நின்றவன் தணிகை நாயகன்
    வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.
  • 4. நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
    வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
    தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
    கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.
  • 5. கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் அந்தகன்
    படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
    தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்
    தடைக்க லம்புகுந் தருள்செ ழிப்பனே.
  • 6. செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்
    கொழிக்கும் நல்லருள் கொள்ளை கொள்ளவே
    தழிக்கொண் டன்பரைச் சார்ந்தி லேன்இவண்
    பழிக்குள் ஆகும்என் பான்மை என்னையோ.
  • 7. என்னை என்னைஈ தென்றன் மாதவம்
    முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
    பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
    அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.
  • 8. அண்ணி லேன்நினை ஐய நின்அடி
    எண்ணி லேன்இதற் கியாது செய்குவேன்
    புண்ணி னேன்பிழை பொறுத்துக் கோடியால்
    தண்ணின் நீள்பொழில் தணிகை அப்பனே.
  • 9. அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
    செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
    துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
    தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.
  • 10. வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்
    உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்
    எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்
    தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.
  • 11. வெற்ப னேதிருத் தணிகை வேலனே
    பொற்ப னேதிருப் போரி நாதனே
    கற்ப மேல்பல காலம் செல்லுமால்
    அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.
  • 12. சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
    ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
    டூறில் கண்களால் உண்ண எண்ணினேன்
    ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.
  • 13. முற்று மோமனம் முன்னி நின்பதம்
    பற்று மோவினைப் பகுதி என்பவை
    வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ
    சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.
  • 14. அத்த னேதணி காச லத்தருள்
    வித்த னேமயில் மேற்கொள் வேலனே
    பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
    சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.
  • 15. ஏதி லார்என எண்ணிக் கைவிடில்
    நீதி யோஎனை நிலைக்க வைத்தவா
    சாதி வான்பொழில் தணிகை நாதனே
    ஈதி நின்அருள் என்னும் பிச்சையே.
  • 16. பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
    இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
    பச்சை மாமயில் பரம நாதனே
    கச்சி நேர்தணி கைக்க டம்பனே.
  • 17. கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
    தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
    இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
    தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
  • 18. பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
    இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
    பச்சை மாமயில் பரம நாதனே
    கச்சி நேர்தணி கைக்க டம்பனே.
  • 19. கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
    தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
    இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
    தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
  • 20. என்சொல் கேன்இதை எண்ணில் அற்புதம்
    வன்சொ லேன்பிழை மதித்தி டாதுவந்
    தின்சொ லால்இவண் இருத்தி என்றனன்
    தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே.
  • 21. தேவ நேசனே சிறக்கும் ஈசனே
    பாவ நாசனே பரம தேசனே
    சாவ காசனே தணிகை வாசனே
    கோவ பாசனே குறிக்கொள் என்னையே.
  • 22. குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
    வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
    முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
    நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.
  • 23. தணிகை மேவிய சாமி யேநினை
    எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்
    அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண்
    கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே.
  • 24. உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
    நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
    தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
    வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.
  • 25. செய்வ தன்றவன் சிறிய னேன்றனை
    வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
    உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே
    சைவ நாதனே தணிகை மன்னனே.
  • 26. மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே
    இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்
    பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே
    தன்னில் நின்றிடும் தணிகை மேலனே.
  • 27. மேலை வானவர் வேண்டும் நின்திருக்
    காலை என்சிரம் களிக்க வைப்பையோ
    சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
    வேலை ஏந்துகை விமல நாதனே.
  • 28. வேத மாமுடி விளங்கும் நின்திருப்
    பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
    கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
    சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.
  • 29. நேயம் நின்புடை நின்றி டாதஎன்
    மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ
    பேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்
    தாய நின்கடன் தணிகை வாணனே.
  • 30. வாணு தல்பெரு மாட்டி மாரொடு
    காணு தற்குனைக் காதல் கொண்டனன்
    ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
    மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.
  • 31. வண்ண னேஅருள் வழங்கும் பன்னிரு
    கண்ண னேஅயில் கரங்கொள் ஐயனே
    தண்ண னேர்திருத் தணிகை வேலனே
    திண்ணம் ஈதருள் செய்யும் காலமே.
  • 32. கால்கு றித்தஎன் கருத்து முற்றியே
    சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்
    மால்ப கைப்பிணி மாறி ஓடவே
    மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.

கருணை மாலை // கருணை மாலை