திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இன்பப் புகழ்ச்சி
iṉpap pukaḻchsi
வியப்பு மொழி
viyappu moḻi
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

008. திரு உலாத் திறம்
tiru ulāt tiṟam

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
    வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி
    தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
    கானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.
  • 2. திருமால் வணங்கும் ஒற்றிநகர் செழிக்கும் செல்வத் தியாகர்அவர்
    கருமால் அகற்றுந் தொண்டர்குழாம் கண்டு களிக்க வரும்பவனி
    மருமாண் புடைய மனமகிழ்ந்து மலர்க்கை கூப்பிக் கண்டலது
    பெருமான் வடுக்கண் பெண்ணேநான் பெற்றா ளோடும் பேசேனே.
  • 3. சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
    ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் அழகு ததும்ப வரும்பவனி
    நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டலது
    பால்ஆர் குதலைப் பெண்ணேநான் பாயிற் படுக்கை பொருந்தேனே.
  • 4. செல்வந் துறழும் பொழில்ஒற்றித் தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்
    வில்வந் திகழும் செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும்பவனி
    சொல்வந் தோங்கக் கண்டுநின்று தொழுது துதித்த பின்அலது
    அல்வந் தளகப் பெண்ணேநான் அவிழ்ந்த குழலும் முடியேனே.
  • 5. சேவார் கொடியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
    பூவார் கொன்றைப் புயங்கள்மனம் புணரப் புணர வரும்பவனி
    ஓவாக் களிப்போ டகங்குளிர உடலங் குளிரக் கண்டலது
    பாவார் குதலைப் பெண்ணேநான் பரிந்து நீரும் பருகேனே.
  • 6. சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
    உற்றங் குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும்பவனி
    சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின்அலது
    முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் முடிக்கோர் மலரும் முடியேனே.
  • 7. சிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
    சந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி
    முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது
    கந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான் கண்­ர் ஒழியக் காணேனே.
  • 8. தென்னஞ் சோலை வளர்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
    பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் பிறங்கா நிற்க வரும்பவனி
    மன்னுங் கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்திக் கண்டலது
    துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் சோறெள் ளளவும் உண்ணேனே.
  • 9. சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
    வந்தார் கண்டார் அவர்மனத்தை வாங்கிப் போக வரும்பவனி
    நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டலது
    பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் பாடல் ஆடல் பயிலேனே.
  • 10. செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
    மிக்கற் புதவாண் முகத்தினகை விளங்க விரும்பி வரும்பவனி
    மக்கட் பிறவி எடுத்தபயன் வசிக்க வணங்கிக் கண்டலது
    நக்கற் கியைந்த பெண்ணேநான் ஞாலத் தெவையும் நயவேனே.

திரு உலாத் திறம் // திரு உலாத் திறம்

No audios found!