திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வீரராகவர் போற்றிப் பஞ்சகம்
vīrarākavar pōṟṟip pañsakam
வைத்தியநாதர் பதிகம்
vaittiyanātar patikam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

064. இரேணுகை பஞ்சகம்
irēṇukai pañsakam

    சென்னை ஏழுகிணறு
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும்
    பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் பத்தியும் எனக்கருள் பரிந்தே
    வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் மணிவளர் அணிமலர் முகத்தாய்
    ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
  • 2. உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்தம் கடைதொறும்ஓடி
    அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன் அகமலர்ந் தருளுதல் வேண்டும்
    நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே நலந்தரு நசைமணிக் கோவை
    இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
  • 3. விருந்தினர் தம்மை உபசரித் திடவும் விரவுறும் உறவினர் மகிழத்
    திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும் சிறியனேற் கருளுதல் வேண்டும்
    வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை வாரியே வடிவுறு மயிலே
    இருந்திசை புகழும் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
  • 4. புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
    நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய்
    விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய்
    எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
  • 5. மனமெலி யாமல் பிணியடை யாமல் வஞ்சகர் தமைமரு வாமல்
    சினநிலை யாமல் உடல்சலி யாமல் சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
    அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
    இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.

    • * அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது.

இரேணுகை பஞ்சகம் // இரேணுகை பஞ்சகம்

No audios found!