திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆனந்த களிப்பு
āṉanta kaḷippu
வெண்ணிலா
veṇṇilā
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

103. பாங்கியர்க் கறிவுறுத்தல்
pāṅkiyark kaṟivuṟuttal

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
  • 1. அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்
    ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமா ரே.
  • 2. ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக
    ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே.
  • 3. இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
    மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமா ரே.
  • 4. ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட
    னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமா ரே.
  • 5. உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப
    உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமா ரே.
  • 6. ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்
    உத்தமருக் குறவாவேன் பாங்கிமா ரே.
  • 7. கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்
    கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமா ரே.
  • 8. கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று
    கண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமா ரே.
  • 9. கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்
    கரையாரென் னளவிலே பாங்கிமா ரே.
  • 10. கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்
    கைவிடவுந் துணிவாரோ பாங்கிமா ரே.
  • 11. கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று
    கைநழுவ விடுவாரோ பாங்கிமா ரே.
  • 12. கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்
    கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமா ரே.
  • 13. காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்
    காதலைக்கண் டறிவாரோ பாங்கிமா ரே.
  • 14. காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்
    கைகலந்த கள்ளரவர் பாங்கிமா ரே.
  • 15. காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு
    காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமா ரே.
  • 16. கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்
    கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமா ரே.
  • 17. கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்
    கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமா ரே.
  • 18. கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது
    கேட்டுவரக் காணேனையோ பாங்கிமா ரே.
  • 19. கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது
    கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமா ரே.
  • 20. கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்
    கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமா ரே.
  • 21. கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்
    கேயடிமை கொண்டாரன்று பாங்கிமா ரே.
  • 22. குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்
    கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமா ரே.
  • 23. குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்
    கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமா ரே.
  • 24. குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள
    குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமா ரே.
  • 25. கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்
    குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமா ரே.
  • 26. கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி
    கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமா ரே.
  • 27. கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது
    கூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமா ரே.

பாங்கிமார் கண்ணி // பாங்கியர்க் கறிவுறுத்தல்