திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
காணாப் பத்து
kāṇāp pattu
குறை நேர்ந்த பத்து
kuṟai nērnta pattu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

026. பணித்திறஞ் சாலாமை
paṇittiṟañ sālāmai

    கலி விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
    நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
    வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
    தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.
  • 2. வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
    மால்நிகழ் பேதையேன் மதித்தி லேன் ஐயோ
    தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
    தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே.
  • 3. கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
    ஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ
    தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
    மருங்கமர்ந் தன்பருள் மன்னும் வாழ்வையே.
  • 4. வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
    பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
    மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
    செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.
  • 5. செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
    பழிப்படும் நெஞ்சினேன் பரவி லேன்ஐயோ
    வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
    பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே.
  • 6. பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
    வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ
    மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய
    கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே.

பணித்திறஞ் சாலாமை // பணித்திறஞ் சாலாமை