திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அபயத் திறன்
apayat tiṟaṉ
பிரியேன் என்றல்
piriyēṉ eṉṟal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

029. பிரிவாற்றாமை
pirivāṟṟāmai

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
    வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
    ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
    சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன்கண்டாயே.
  • 2. செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
    சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
    புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
  • 3. வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
    பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
    சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
    மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
  • 4. கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
    தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
    வருணப் படிக மணிமாலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
    பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.
  • 5. திண்ணமும் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
    வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
    தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
    எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
  • 6. நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
    ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
    பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
    வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
  • 7. வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
    பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
    சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
    ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே.
  • 8. பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
    கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
    மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
    மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
  • 9. சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
    காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
    நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
    ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.
  • 10. பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
    சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
    நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
    ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.

    • 242. கண்டாயே - முதற்பதிப்பு, பொ. க., ச.மு.க.
    • 243. கொடுத்த - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. ச.மு.க.,

பிரிவாற்றாமை // பிரிவாற்றாமை

No audios found!