திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
என்ன புண்ணியம் செய்தேனோ
eṉṉa puṇṇiyam seytēṉō
பெரு வழக்கு
peru vaḻakku
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

123. வருவார் அழைத்துவாடி
varuvār aḻaittuvāṭi

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
    வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
  • பல்லவி எடுப்பு
  • 2. திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
    சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
  • கண்ணிகள்
  • 3. சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
    தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
    இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
    இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
  • 4. இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
    இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
    ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
    உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
  • 5. மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
    விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
    எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
    இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
    வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
    வந்தாற் பெறலாம்நல்ல வரமே.

    • 313. உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

வருவார் அழைத்துவாடி // வருவார் அழைத்துவாடி