திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
உறுதி உணர்த்தல்
uṟuti uṇarttal
கையடை முட்டற் கிரங்கல்
kaiyaṭai muṭṭaṟ kiraṅkal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

034. எண்ணத் தேங்கல்
eṇṇat tēṅkal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
    புண்ணிய நின்திரு அடிக்கே
    யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
    யாதுநின் திருஉளம் அறியேன்
    தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
    செய்திடா திருப்பையோ சிறியோன்
    ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
    ஈவையோ தணிகைவாழ் இறையே.
  • 2. வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
    வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
    ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
    அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
    தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
    சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
    வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
    வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.

எண்ணத் தேங்கல் // எண்ணத் தேங்கல்