திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தத்துவ வெற்றி
tattuva veṟṟi
உய்வகை கூறல்
uyvakai kūṟal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

100. பேறடைவு
pēṟaṭaivu

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
    வரையுள தாதலால் மகனே
    எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
    தெழில்உறு மங்கலம் புனைந்தே
    குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
    கோலத்தால் காட்டுக எனவே
    வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
    வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
  • 2. எம்பொருள் எனும்என் அன்புடை மகனே
    இரண்டரைக் கடிகையில் உனக்கே
    அம்புவி வானம் அறியமெய் அருளாம்
    அனங்கனை333 தனைமணம் புரிவித்
    தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும்
    உண்மைஈ தாதலால் உலகில்
    வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார்
    மெய்ப்பொது நடத்திறை யவரே.
  • 3. அன்புடை மகனே மெய்யருள் திருவை
    அண்டர்கள் வியப்புற நினக்கே
    இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
    இரண்டரைக் கடிகையில் விரைந்தே
    துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
    தூய்மைசேர் நன்மணக் கோலம்
    பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
    பொதுநடம் புரிகின்றார் தாமே.
  • 4. ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
    இரண்டரைக் கடிகையில் நினக்கே
    ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
    உண்மைஈ தாதலால் இனிவீண்
    போதுபோக் காமல் மங்கலக் கோலம்
    புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
    தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
    தெருட்டிய சிற்சபை யவரே.
  • 5. விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
    மெய்யருள் திருவினை நினக்கே
    வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
    வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
    இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
    எல்லையுள் எழில்மணக் கோலம்
    நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
    நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
  • 6. களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
    கடிகைஓர் இரண்டரை அதனில்
    ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
    உனக்குநன் மணம்புரி விப்பாம்
    அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
    அணிபெறப் புனைகநீ விரைந்தே
    வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
    விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
  • 7. கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக்
    களிப்பொடு மணம்புரி விப்பாம்
    விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல்
    விரைந்துநன் மங்கலக் கோலம்
    நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர்
    நவிலும்அவ் வுலகவர் பிறரும்
    இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார்
    இயலுறு சிற்சபை யவரே.
  • 8. ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே
    அருள்ஒளித் திருவைநின் தனக்கே
    மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்
    விரைந்திரண் டரைக்கடி கையிலே
    கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும்
    களிப்பொடு மங்கலக் கோலம்
    வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக
    என்றனர் மன்றிறை யவரே.
  • 9. தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே
    தூயநீர் ஆடுக துணிந்தே
    பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
    பண்பொடு புனைந்துகொள் கடிகை
    ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை
    எழில்உற மணம்புரி விப்பாம்
    ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார்
    இயன்மணி மன்றிறை யவரே.
  • 10. மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை
    மணம்புரி விக்கின்றாம் இதுவே
    வயங்குநல் தருணக் காலைகாண் நீநன்
    மங்கலக் கோலமே விளங்க
    இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை
    எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார்
    சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த
    தந்தையார் சிற்சபை யவரே.

    • 333. அங்கனை - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா., ச. மு. க.

பேறடைவு // பேறடைவு