திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அபயம் அபயம் அபயம்
apayam apayam apayam
ஆணிப்பொன்னம்பலக் காட்சி
āṇippoṉṉampalak kāṭsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

127. அற்புதம் அற்புதமே
aṟputam aṟputamē

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. அற்புதம் அற்புத மே - அருள்
    அற்புதம் அற்புத மே.
  • கண்ணிகள்
  • 2. சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
    சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
    கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
    கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்
  • 3. செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
    சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
    இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
    இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
  • 4. ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
    அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
    ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
    என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
  • 5. சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
    சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
    நித்திய ஞான நிறையமு துண்டனன்
    நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
  • 6. வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
    வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
    தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
    சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்
  • 7. புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
    பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
    மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
    வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
  • 8. வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
    வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
    செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
    சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்
  • 9. சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
    சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
    மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
    மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
  • 10. அற்புதம் அற்புத மே - அருள்
    அற்புதம் அற்புத மே.

அருள் அற்புதம் // அற்புதம் அற்புதமே