திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சின்னம் பிடி
siṉṉam piṭi
பிரபஞ்ச வெற்றி
pirapañsa veṟṟi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

132. கண்புருவப் பூட்டு
kaṇpuruvap pūṭṭu

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
    கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
    ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
    ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.
  • 2. சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
    தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
    இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
    என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
  • 3. ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
    ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
    எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
    என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
  • 4. ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
    ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
    தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
    தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
  • 5. மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
    மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
    சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
    செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.
  • 6. துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
    தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
    தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
    செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
  • 7. சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
    தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
    எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
    இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.
  • 8. சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
    சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
    இற்பகரும்345 இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
    என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
  • 9. வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
    மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
    வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
    மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.
  • 10. அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
    அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
    வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
    வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.
  • 11. நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
    நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
    சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
    செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

    • 345. இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு.

கண்புருவப் பூட்டு // கண்புருவப் பூட்டு