திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருள் விலாசம்
tiruvaruḷ vilāsam
அம்மை திருப்பதிகம்
ammai tiruppatikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

099. சிவ சிதம்பர சங்கீர்த்தனம்
siva sitampara saṅkīrttaṉam

    எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலக முஞ்சரா சரமும் நின்றுநின்
    றுலவு கின்றபே ருலகம் என்பதும்
    கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற்
    கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
    இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர்
    இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
    திலகம் என்றநங் குருசி தம்பரம்
    சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
  • 2. வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
    மனம டங்குசிற் கனந டந்தரும்
    உரமு றும்பதம் பெறவ ழங்குபே
    ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
    பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
    பரம மாகியே பரவு மாமறைச்
    சிரமு றும்பரம் பரசி தம்பரம்
    சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
  • 3. நித்தி யம்பரா பரநி ராதரம்
    நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்
    சத்தி யம்கனா கனமி குந்ததோர்
    தற்ப ரம்சிவம் சமர சத்துவம்
    வித்தி யஞ்சுகோ தயநி கேதனம்
    விமலம் என்றுநால் வேத முந்தொழும்
    சித்தி யங்குசிற் கனசி தம்பரம்
    சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
  • 4. அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
    ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
    பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
    புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
    வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
    வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
    தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
    சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
  • 5. பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
    பேத மாயதோர் போத வாதமும்
    சுத்த முந்தெறா வித்த முந்தரும்
    சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
    நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
    நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
    சித்த முஞ்செலாப் பரம ராசியம்
    சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.

சிவ சிதம்பர சங்கீர்த்தனம் // சிவ சிதம்பர சங்கீர்த்தனம்

No audios found!