திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருண்மொழி மாலை
aruṇmoḻi mālai
கண் நிறைந்த கணவன்
kaṇ niṟainta kaṇavaṉ
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

059. இன்ப மாலை
iṉpa mālai

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான்
    என்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றுரைத்தேன்
    துன்றும் விசும்பே யென்றனர்நான் சூதா முமது சொல்லென்றேன்
    குன்றுங் குடமு மிடையுனது கொங்கை யெனவே கூறினரே.
  • 2. கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
    மானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர்
    தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான்
    ஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே.
  • 3. வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தீரென்
    மானங் கெடுத்தீ ரென்றேன்முன் வனத்தார் விடுத்தா ரென்றார்நீர்
    ஊனந் தடுக்கு மிறையென்றே னுலவா தடுக்கு மென்றார்மால்
    ஏனம் புடைத்தீ ரணையென்பீ ரென்றே னகலா ரென்றாரே.
  • 4. இருமை யளவும் பொழிலொற்றி யிடத்தீர் முனிவ ரிடரறநீர்
    பெருமை நடத்தீ ரென்றேனென் பிள்ளை நடத்தி னானென்றார்
    தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்றார்
    கரும மெவன்யான் செயவென்றேன் கருதாண் பாலன் றென்றாரே.
  • 5. ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே வுருக்குகின்ற
    வசியர் மிகநீ ரென்றேனென் மகனே யென்றார் வளர்காமப்
    பசிய துடையே னென்றேனுட் பணியல் குலுமப் படியென்றார்
    நிசிய மிடற்றீ ராமென்றேன் நீகண் டதுவே யென்றாரே.
  • 6. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணையீர்
    மலையா ளுமது மனைவியென்றேன் மலைவா ளுனைநான் மருவினென்றார்
    அலையாண் மற்றை யவளென்றே னலைவா ளவளு மறியென்றார்
    நிலையாண் மையினீ ராவென்றே னீயா வென்று நின்றாரே.
  • 7. சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
    சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார்
    ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார்
    சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே.
  • 8. ஞால ராதி வணங்குமொற்றி நாதர் நீரே நாட்டமுறும்
    பால ராமென் றுரைத்தேனாம் பால ரலநீ பாரென்றார்
    மேல ராவந் திடுமென்றேன் விளம்பேல் மகவு மறியுமென்றார்
    கோல ராமென் றுரைத்தேன்யாங் கொண்டோ முக்க ணென்றாரே.
  • 9. வண்மை தருவீ ரொற்றிநின்று வருவீ ரென்னை மருவீர்நீர்
    உண்மை யுடையீ ரென்றேனா முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார்
    கண்மை யுடையீ ரென்றேனீ களமை யுடையேம் யாமென்றார்
    தண்மை யருளீ ரென்றேனாந் தகையே யருள்வ தென்றாரே.
  • 10. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே
    யென்னா குலத்தை யோட்டுமென்றே னிடைய ரலநா மென்றுரைத்தார்
    பொன்னாற் சடையீ ரென்றேனென் புதிய தேவி மனைவியென்றார்
    சொன்னாற் கேள்வி வியப்பென்றேன் சுத்த வியப்பொன் றென்றாரே.
  • 11. கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் கடிநகரீர்
    தனிமா னேந்தி யென்றேனென் றலைமே லொருமா னேந்தியென்றார்
    துனிமாற் றுகிலீ ரென்றேனற் றுகில்கோ வணங்கா ணென்றாரென்
    பனிமால் வரையீ ரென்றேனென் பனிமால் வரைகா ணென்றாரே.

இன்ப மாலை // இன்ப மாலை

No audios found!