திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
போக் குரையீடு
pōk kuraiyīṭu
நெஞ்சொடு புலத்தல்
neñsoṭu pulattal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

018. பணித்திறம் வேட்டல்
paṇittiṟam vēṭṭal

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
    கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி
    உண்ணேனோ ஆனந்தக் கண்­ர்கொண் டாடிஉனக் குகப்பாத் தொண்டு
    பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே.
  • 2. பாவியேன் படுந்துயருக் கிரங்கிஅருள் தணிகையில்என் பால்வா என்று
    கூவிநீ ஆட்கொளஓர் கனவேனும் காணேனோ குணப்பொற் குன்றே
    ஆவியே அறிவேஎன் அன்பேஎன் அரசேநின் அடியைச் சற்றும்
    சேவியேன் எனினும்எனைக் கைவிடேல் அன்பர்பழி செப்பு வாரே.
  • 3. வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியே நின்று
    பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும்இச் சோபம்
    தீரேனோ நின்அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
    சாரேனோ நின்அடியர் சமுகம்அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ.
  • 4. கொள்ளேனோ நீஅமர்ந்த தணிகைமலைக் குறஎண்ணம் கோவே வந்தே
    அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே ஆனந்தத் தழுந்தி ஆடித்
    துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ துதித்துலகத் தொடர்பை எல்லாம்
    தள்ளேனோ நின்அடிக்கீழ்ச் சாரேனோ துணைஇல்லாத் தனிய னேனே.
  • 5. தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
    கனியேநின் சேவடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ
    துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில்
    இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே.
  • 6. இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும் தேவைஎன திருகண் ஆய
    செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந் தானந்தத் தெளிதேன்உண்டே
    எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ அவன்பணிகள் இயற்றி டேனோ
    தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல் உழல்தருமிச் சிறிய னேனே.
  • 7. சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
    குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
    அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
    முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
  • 8. முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
    மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
    உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
    என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும்அவர்க் கிதங்கூ றேனோ.
  • 9. கூறேனோ திருத்தணிகைக் குற்றுன்அடிப் புகழதனைக் கூறி நெஞ்சம்
    தேறேனோ நின்அடியர் திருச்சமுகம் சேரேனோ தீராத் துன்பம்
    ஆறேனோ நின்அடியன் ஆகேனோ பவக்கடல்விட் டகன்றே அப்பால்
    ஏறேனோ அருட்கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே.
  • 10. தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே
    நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக்
    கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
    பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.

பணித்திறம் வேட்டல் // பணித்திறம் வேட்டல்