திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
செவி அறிவுறுத்தல்
sevi aṟivuṟuttal
இங்கிதப் பத்து
iṅkitap pattu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

048. தேவ ஆசிரியம்
tēva āsiriyam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
    தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
    காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
    தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
  • 2. மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்தசை அறும்என்பைக்
    கறிக்கும் நாயினும் கடையநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
    குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
    தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
  • 3. பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
    கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
    அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
    தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.

தேவ ஆசிரியம் // தேவ ஆசிரியம்