திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிறு விண்ணப்பம்
siṟu viṇṇappam
திருக்காட்சிக் கிரங்கல்
tirukkāṭsik kiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

060. பெரு விண்ணப்பம்
peru viṇṇappam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. இருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
    மருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
    அருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
    தெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.
  • 2. உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால்
    எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
    வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
    வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே.
  • 3. எளியேன் இழைத்த பெறும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
    களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
    ஒளியே முக்கட் செழுங்கரும்பே ஒன்றே அன்பர் உறவேநல்
    அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.
  • 4. காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
    ஏமக் கொடுங்கூற் றெனும்மகரம் யாது செயுமோ என்செய்கேன்
    நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
    தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே.
  • 5. எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
    தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே
    கண்ணார் நுதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ்
    வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே.
  • 6. பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
    மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
    நாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
    மேலே அருள்கூர்ந் தெனைநின்தாள் மேவு வோர்பால் சேர்த்தருளே.
  • 7. கண்ணார் நுதலோய் பெருங்கருணைக் கடலோய் கங்கை மதிச்சடையோய்
    பெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்
    அண்ணா எனநின் றேத்தெடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடிமலரை
    எண்ணா துழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே.
  • 8. பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன் எனினும் புகல்இடந்தான்
    ஐயோ நினது பதம்அன்றி அறியேன் இதுநீ அறியாயோ
    கைஓர் அனல்வைத் தாடுகின்ற கருணா நிதியே கண்ணுதலே
    மெய்யோர் விரும்பும் அருமருந்தே வேத முடிவின் விழுப்பொருளே.
  • 9. இன்னே எளியேன் பொய்யுடையேன் எனினும் அடியன் அலவோநான்
    என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே
    அன்னே என்றன் அப்பாஎன் ஐயா என்றன் அரசேசெம்
    பொன்னே முக்கட் பொருளேநின் புணர்ப்பை அறியேன் புலையேனே.
  • 10. வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத
    நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
    விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால்
    எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே.

பெரு விண்ணப்பம் // பெரு விண்ணப்பம்

No audios found!