திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருப்புகற் பதிகம்
tiruppukaṟ patikam
உய்கைத் திருப்பதிகம்
uykait tiruppatikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

075. சிந்தைத் திருப்பதிகம்
sintait tiruppatikam

    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
    இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
    நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
    உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
  • 2. கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
    உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
    மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
    சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.
  • 3. கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
    நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
    வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
    எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே.
  • 4. கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்
    வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
    உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ
    எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே.
  • 5. சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி
    ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
    கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
    ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே.
  • 6. பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
    நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
    தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
    தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே.
  • 7. வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
    உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
    தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
    கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.
  • 8. என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
    உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
    மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
    தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.
  • 9. குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
    உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
    நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
    கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே.
  • 10. அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
    நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
    பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
    வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே.

சிந்தைத் திருப்பதிகம் // சிந்தைத் திருப்பதிகம்